Wednesday, February 11, 2009

பயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதற்கு பரதேசி தேவன் வருகிறார்

ஒருகாலத்தில் மக்களை வழிநடத்திய தலைவர்கள், ஏதாவதொரு அரசியல் கொள்கையை முன்மொழிந்தார்கள். தாம் காட்டும் வழியில் சென்றால், ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் என்று நம்பிக்கையூட்டினார்கள். ஆனால் இன்றைய அரசியல் தலைவர்கள், மக்களை நிர்வகிப்பவர்களாக மட்டுமே உள்ளனர். மதம் உட்பட அனைத்து வகை அரசியல் சித்தாந்தங்களிலும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாலோ என்னவோ, நமது காலத்து தலைவர்கள், தம்மை மீட்பர்களாக மட்டுமே காட்டிக் கொள்கின்றனர். நிச்சயமற்ற எதிர்காலம் குறித்த அச்சத்தில் இருந்து மக்களை மீட்க முனைகின்றனர். இன்னும் சிறப்பாக சொன்னால், தேசத்தை பிடித்தாட்டும் "பயங்கரவாதம்" என்ற பிசாசிடமிருந்து எமக்கு விடுதலை வாங்கித் தருவதாக உறுதியளிக்கின்றனர்.

"அச்சத்தில் இருந்து மக்களை மீட்கும் அரசியல்" பற்றிய இந்த ஆவணப்படம் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று.

Politics - The Power of Nightmares


Part 1:Baby it's Cold Outside


Part 2: The Phantom Victory


Part 3: The Shadows in the Cave

No comments: