Sunday, February 14, 2010

வத்திகானை எதிர்த்து இத்தாலியர்கள் ஆர்ப்பாட்டம்

இத்தாலியின் தலைநகரம் ரோம் முன்னொருபோதும் காணாத எதிர்ப்பு ஊர்வலத்தை கண்டது. கத்தோலிக்க மத தலைமை நிறுவனமான "வத்திக்கான் எமக்கு வேண்டாம்" என்ற பதாகைகளை ஏந்திய படி பல நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இத்தாலி அரசு ஒவ்வொரு வருடமும் ஒரு பில்லியன் டாலர் மக்களின் வரிப்பணத்தை வத்திக்கானுக்கு வழங்கி வருகின்றது. அண்மைக்காலமாக வத்திக்கான் அரசாங்க அலுவல்களில் தலையிடுவதால் மக்களில் பலர் வெறுத்துப் போய் உள்ளனர். இத்தாலியில் சர்ச்சையை தோற்றுவித்த கருணைப் படுகொலை ஒன்றிற்கு வத்திக்கான் எதிர்ப்பு தெரிவித்தது. இத்தாலி பாடசாலைகளில் சாமிப் படங்கள், மத சின்னங்கள் வைப்பதை நீதி மன்றம் தடை செய்தது. மதச்சார்பற்ற கல்வியை வலியுறுத்திய நீதி மன்ற தீர்ப்பை, வத்திக்கான் கண்டித்திருந்தது.
Anti-Vatican protest hits London
Come and protest at the Vatican’s interference in politics

No comments: