Wednesday, February 15, 2012

பொருளாதார நெருக்கடி, கிரேக்கத் தலைநகரம் எரிகின்றது!

12.02.2012, பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் கிரேக்க அரசு, ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிந்த சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்த ஒத்துக் கொண்டுள்ளது. பாராளுமன்றத்தினுள் "மக்கள் பிரதிநிதிகள்", மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த வேளை, ஏதென்ஸ் நகரில் மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு எதிராக, தொழிற்சங்கங்கள் அறிவித்த இரண்டு நாள் வேளை நிறுத்தப் போராட்டம் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப் பட்டது. புரட்சிகர அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று, இலட்சக்கணக்கான மக்கள், ஏதென்ஸ் நகரில் திரண்டனர். அரபுலக வசந்தம் பற்றிய செய்திகளை நாள் தவறாமல் அறிவித்துக் கொண்டிருந்த ஊடகங்கள், கிரேக்க மக்கள் எழுச்சியை இருட்டடிப்பு செய்தன.

12 .02 .2012 அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், தேசிய வரித் திணைக்களம் ஆக்கிரமிக்கப் பட்டது. அங்கிருந்த தஸ்தாவேஜுகள் நாசமாக்கப் பட்டன. நாடு முழுவதும் பின்வரும் அரச நிறுவனங்கள் மக்களால் ஆக்கிரமிக்கப் பட்டன. Athens Law School, Ministry of Health in Athens, Building of the Regional government. மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் வங்கிகள் இலக்கு வைத்து தாக்கப் பட்டன. ஒரு வங்கிக் கட்டிடம் முற்றாக எரிந்தது. போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதால், சரமாரியாக பெட்ரோல் குண்டுகள் வீசப் பட்டன. இதனால் ஏதென்ஸ் நகரம் எங்கும் தீச்சுவாலைகள் பரவின. நகரம் முழுவதும் தீப்பற்றி எரிவதைப் போன்றிருந்தது. அங்கு நடந்த சம்பவங்களை, கீழேயுள்ள வீடியோக்களில் பார்வையிடலாம்.









கிரேக்க மக்கள் எழுச்சி பற்றிய முன்னைய பதிவுகள்:
1. வர்க்கப் போர் இட்ட தீ: ஏதென்ஸ் எரிகின்றது
2.ஏதென்ஸ் நகரம் மீண்டும் எரிகின்றது
3.கிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது

No comments: